PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Wednesday, January 25, 2012

'அமளி துமளி' குறும்பட விமர்சனம்



நேற்று திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தில் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள்.  திருப்பூர் கிருஷ்ணன் முக்கிய விருந்தாளியாக வந்திருந்தார்.  ஆனால் கூட்டம் குறைவாகவே வந்திருந்தது.  அதை ஈடு கட்ட தங்களது சொந்த பள்ளியிலிருந்து மாணவ மாணவிகளை அழைத்துவந்து உட்கார வைத்து இருந்தார்கள்.  பள்ளி மாணவர்களை எதற்கெல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள் பாருங்கள்.  அவர்களும் இது ஓர் பாடவகுப்பாய் பாவித்து வழக்கம் போல சல சலவென அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.  யார் உச்சஸ்தாயியில் பேசினாலும் கை தட்டிக் கொண்டிருந்தனர்.

கே.பி.கே. செல்வராஜ் பேசும்போது "மழைவர என்ன ராகம் வாசிக்க வேண்டும்"- என கேட்டார்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் "அமிர்தவர்ஷினி" என்று சொன்னார்.

"சரி.  புயல் வர என்ன ராகம் பாடவேண்டும்?"

 எல்லோரும் விழித்தனர்.

"வொய் திஸ் கொலைவெறி பாடினால் புயல் வந்து ஒரு தட்டு தட்டிவிடும்" என்று சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது.  என்னே ஒரு டைமிங்?

திருப்பூர் கிருஷ்ணன் கொஞ்சம் நா.பா பற்றியும் மு.வ பற்றியும் மலரும் நினைவுகளாகப் பேசினார். இன்னும் கொஞ்ச நேரம் கொடுத்திருந்தால் நன்றாகப் பெசஈருப்பாரோ என்னவோ?

அடுத்து மூன்று குறும்படங்கள் போட்டுக் காட்டினார்கள்.

நமது நாளைய இயக்குனர் ரவிக்குமாருடைய ஜீரோ கிலோ மீட்டர், பசி படங்களும்,  தாண்டவக்கோனின் அமளி துமளியும் திரையிட்டார்கள்.

ரவிக்குமாரின் பசியும், ஜீரோ கி.மீ. இரண்டு படங்களும் கலைஞர் டி.வியில் பார்த்து பல தடவை பரவசப் பட்டுவிட்டதால் அமளி துமளி படம் என்னை வசீகரித்தது.


இன்றைய நிலையில் விவாகத்துக்கு பெண் கிடைப்பதுதான் மிகக் கஷ்டமாய் இருக்கிறது.  ஆனால் விவாகரத்து ஈசியாக கிடைத்துவிடுகிறது.  விவாகரத்து பெருகிவரும் இந்த கால கட்டத்தில் அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் அற்பமாக இருக்கும்.

போனவார ஆனந்தவிகடனின் என்விகடனில் வெளியான வக்கீல்களின் பேட்டியைப் படித்தால் பகீர் என்கிறது.  காலையில் ரெஜிஸ்டர் ஆபீசில் கல்யாணம்.  வெளியே வந்து மதிய உணவு.  என்ன சாப்பிடுவது- வெஜ் அல்லது நான் வெஜ்ஜா என்று பிரச்சினை.  நண்பர்கள் எல்லோரும் நான் வெஜ் கேட்டதால் மாப்புவும் நான் வெஜ் என்று உறுதியாக நின்றார்.  பெண்ணோ நல்ல நாள் அதுவுமா நான் வெஜ் கூடாது என்று சொல்ல பிரச்சினை முற்றியது.  இது செட் ஆவாது என்று முடிவு செய்து உடனே எதிரில் கண்ட வக்கீல ஆபீசுக்குப் போய் பரஸ்பர விவாகரத்துக்கு எழுதிக்கொடுத்துவிட்டு பிரிந்துவிட்டனராம்.

என்ன காதல் செய்தனரோ? என்ன கன்றாவியோ?  இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்.

இந்தப் படமும் அதைப் பற்றியதுதான்.

உப்புச் சப்பில்லாத காரணத்துக்காக கணவனும் மனைவியும் அவர்களுடைய ஒரே பையன் முன்னிலையில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.   கணவன் அவளுடைய செல்போனை போட்டு உடைத்துவிட்டு ஆபீஸ் போய் விடுகிறான்.

மனைவி பையனை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்தில் அடுப்பில் கையை சுட்டுக்கொள்கிறாள்.  பையன் பள்ளிக்கு போக முடியவில்லை.  அந்த நேரம் பார்த்து அப்பாவின் போன் வருகிறது.  மகள் அழுதபடியே போனை எடுக்கிறாள்.  அப்பா பதறிப் போய் என்ன ஏதுவென்று விசாரிக்க மகளும் சண்டையை மேம்போக்காக சொல்லிவிடுகிறாள்.

ஆத்திரம் அடைந்த அப்பா உடனே அவருடைய மனைவிக்கு கான்பிரன்ஸ் காலில் அழைத்து மகளை விசாரிக்கச் சொல்ல தாயோ பதறுகிறார்.   கோபம் தலைக்கேற அதே லைனில் வக்கீலை பிடித்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கிறார்.  அவரோ உடனே விவாகரத்துக்கு அப்ளை பண்ணிடவேண்டியதுதான் என்கிறார்.

இதையெல்லாம் அந்த பையன் பதட்டத்தோடு பார்த்துகொண்டிருக்கிறான்.
எங்கே அப்பா அம்மா பிரிந்துவிடுவார்களோ என்கிற பயம் முகத்தில் தெரிகிறது.  சைக்கிளை எடுத்துக்கொண்டு அப்பாவின் ஆபீஸ் போய்ப் பார்க்கிறான்.

அங்கே அப்பாவின் ஆபீசில் நண்பர்களுடன் ஆலோசனை.  ஆளாளுக்கு மனைவியை ஒதுக்கிவிட ஐடியா கொடுக்கிறார்கள்.  நமக்குத்தான் பிரச்சினை பெரிசாக்குனாத்தானே திருப்தி.

இந்த சமயத்தில் அந்தப் பையன் உடைந்த செல்போனை சரி செய்து அப்பாவுக்கு ஸாரி என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறான்.  அவ்வளவுதான் எல்லாப் பிரச்சினைகளும் தீர்கிறது.

ஒரு இரண்டெழுத்து வார்த்தையில் தீர்க்கிற பிரச்சினையை மற்றவர்கள் எல்லோரும் எப்படி ஊதி பெரிதாக்குகிறார்கள் என்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்.
இந்த படத்தை பார்க்க இங்கே  செல்லுங்கள்.

இவருடைய 'பூங்கா', 'இப்படிக்கு பேராண்டி' என்கிற முந்தைய படங்களை பார்த்திருக்கிறேன்.  அதில் லென்த்தியான ஷாட்களும் வசனங்களும் சோர்வைத் தந்தன.  ஆனால் இந்தப் படத்தில் எடிட்டிங் சூப்பராக பண்ணியிருக்கிறார்கள்.

நடித்த நடிகர்களும் சிறப்பாகப் பண்ணியிருக்கிறார்கள்.

தாண்டவக்கோனின் மெச்சூர்டான இயக்கத்தை பார்க்கிறேன்.  வெல்டன் சார்.  இதே மாதிரியான சிறப்பான படங்களை எடுத்து மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

என்னுடைய பசங்களுக்கும் என் தங்கமணிக்கும் இவருடைய படங்கள் மிகவும் பிடிக்கும்.  எங்கள் வீட்டில் அடிக்கடி இவருடைய குறுந்தகடுகள் ஓடிச் சலித்துவிட்டன.

இவருடைய எல்லாப் படங்களின் குறுந்தகடு இன்று தொடங்க இருக்கும் புத்தகக் கண்காட்சியில் இவருடைய ஸ்டாலில் கிடைக்கும்.  இவை மட்டுமில்லாமல் இன்னொரு ஸ்டாலில் எல்லாவகையான உலக சினிமாக்களும் கிடைக்கும்.  ஆகையால் நண்பர்களே உங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்க புத்தகக் கண்காட்சிக்கு படையெடுத்து வாருங்கள்.




 

2 comments :

  1. i too watched that shortmovie amli thumli..within six minutes thandavakon tells us an usual emotions casually .. nice.. including your review..thanks

    ReplyDelete
  2. என்னே ஒரு டைமிங்?

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......